இமெயிலில் வந்தது

July 06 2016

கீழேயுள்ள படம் ரத்தன் டாடாவுக்கு தரப்பட்ட ஒரு அன்பளிப்பு...இதைப் பார்க்கும் போது ஏதோ குழப்பமான வண்ணக் கலவையாகவே தோன்றுகிறது அல்லவா?
இதன் நடுவிலுள்ள வட்டத்தில் ஒரு பளபளப்பான இரும்பு உருளையை வைக்கும்போது அதில் தோன்றுவது ரத்தன் டாடாவின் உருவம்.
இதைச் செய்தவர் மிகப் பிரபல‌ ஓவியரோ,விஞ்ஞானியோ அல்ல.சாலையில் படம் வரையும் ஒரு சாதாரண மனிதர்.அரும் பெரும் திறமைகள் எங்கெல்லாம் ஒளிந்திருக்கின்றன பாருங்கள்.

சிரிக்க மட்டும்

July 04 2016
“செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....

ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...

மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா

மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....

தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)

நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..

முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?

லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்படி?


கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...

நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”

நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?

* J to the A to the V to the A --- JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.
* C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++

வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)
1. படிப்பு
2. விளையாட்டு
3. பொழுது போக்கு
4. காதல்
5.
6.
7.
ஹலோ... என்ன தேடுறீங்க? காதல் வந்த பிறகுதான் எல்லாமே போயிருமே...!!!

Lessons learned from Swathi's murder

July 02 2016

1. Girls married or unmarried should be selective in accepting friends request in facebook and other social media.

2. Avoid posting photos in different attires.If interested to post such photos paste it in relatives group.

3.Don't entertain boys whom you find suspicious on the first acquaintance .

4. Don't confirm friend requests from anyone who disguises himself with names of popular figures.

5. Don't post your views in groups which are very often entertains unwanted chats in any social media.

6. Don't trust anyone just because he is professionally qualified as you are.

7. Don't disclose any of your personal likes and dislikes in such groups.

8.Avoid people who have inherent hatred against working and high earning people.

9.It is highly advisable to limit your friends circle with close friends, colleagues and relatives.

10. Don't open the social media sites at tea breaks and during busy traveling hours.

11. Don't decide your life partner without parent's knowledge or concern.

12. Don't get into any sort of relationship Without knowing the background or family details of person.

13. Don't disclose your cell numbers to strangers at any cost.

14. If anyone approaches you for request of friendship or love affairs without your consent immediately inform your parents and if necessary inform to police.

15. Don't go out with the person whom you don't trust or believe. Take care..

சென்னை To கோவை

July 01 2016
போன வேலை முடிந்து ரயில் ஏறினால் கீழ் படுக்கை எனக்கு. பக்கத்தில் இருந்தவர் “எந்த ஊர்?”என்றார். கோயமுத்தூருங்க என்றேன்.

பல நேரங்களில் கோயம்புத்தூரில் இறங்குவதற்கு பதிலாக கொச்சினில் போய் இறங்கிய சம்பவங்களையெல்லாம் நினைவில் கொண்டு…. ”ஊர் வந்தா கொஞ்சம் எழுப்பிவிடுங்க… நான் மறந்து தூங்கீருவேன்” என்றேன்.

”நிச்சயமா பிரதர்” என்றார் அவர்.

டிடிஆர் இன்னும் எங்கள் பெட்டிக்கு வரவில்லை.

“என்ன பண்ணீட்டு இருக்கீங்க?”

சி சி டிவி கேமரா பண்ணிட்டு  இருக்கேன்…ன்னேன்.

எங்க எங்க பன்னிருக்கிங்க?

School, College, Hospitals, Companies 

அப்பறோம் நீங்க என்ன பண்றீங்க?

Blog எல்லாம் எழுதுவேன்…. நெறய புக்ஸ் படிப்பேன்....

நீங்க படிப்பீங்களா? என்றேன் ஆர்வம் மிகுதியில்.

”ஓ படிப்பேன்” என்றார்.

எந்த புக்கு? என்றேன்.

”வேற என்ன? பைபிள்….தான்” என்றார்.

அட சரியாகத்தான் உதவி கேட்டிருக்கிறேன். எழுப்புதல் கூட்டம் நடத்துபவரிடமே என்னை எழுப்பிவிடச் சொல்லி இருக்கிறேன்….

வீசிங் இருக்கிறதோ இல்லையோ… ஆனாலும் சும்மானாச்சுக்கும் இந்த இன்ஹேலரை ஒரு அமுக்கு அமுக்கும் பழக்கம் உண்டு. இதைப் பார்த்த பக்கத்து பெர்த் பிரதர் “உங்க சரீரத்துல பிரச்சனை இருக்கு” என்றார்.

இருக்குறதுனாலதான இதை அமுக்குறேன்? என்றேன். காலைல நீங்க எந்திரிக்கறப்போ இந்தப் பிரச்சனை உங்க சரீரத்த விட்டுப் போயிருக்கும் என்றார் கனிவாக.

நீங்க எம்.பி.பி.எஸ் எந்தக் காலேஜ்ல முடிச்சீங்க? என்றேன் ஆச்சர்யம் தாளாமல்.

நான் டாக்டரில்லை..,… ஆனா உங்குளுக்காக ஜெபிச்சா சரீரம் சரியாகும் என்றது அது.

அய்யய்யோ…. மத்தவங்களுக்கு எல்லாம் எதெதுலயோ கண்டம்ன்னா….. நம்முளுக்கு நாக்குல கண்டமாச்சேன்னு பயம் கிளம்பீடுச்சு.

”அதுக்கு விசுவாசம் முக்கியம் பிரதர்” என்றார் மீண்டும்.

இங்க அவனவன் சுவாசத்துக்கே சிரமப்பட்டுகிட்டு இன்ஹேலர் அடிச்சா இது வேற விசுவாசத்தப் பத்தி வகுப்பெடுக்குதே…. ஒருவேளை அதுக்கும் ஒரு இன்ஹேலர் வந்திருக்கோ என்னவோ….. யார் கண்டது?

ஆனாலும் வாயைத் தொறந்தா அப்புறம் நிச்சயமா கொச்சின்தான் என்கிற பயத்தில் தூங்க ஆரம்பித்தேன்.

டீ…. காபி…. டீ…. காபி…. சத்தம் கேட்டு எதேச்சையாய் விழித்தால் திருப்பூரில் நிற்கிறது வண்டி. நம்ம “விசுவாசமோ” குறட்டையின் உச்சத்தில்.

அய்யா கோயமுத்தூர் வந்திரும் எந்திரிங்க என்று எழுப்பி விட்டேன். அவர் சொன்னது மாதிரியே எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் இருப்பது போல பிரமை.
போய் மூஞ்சி கழுவி விட்டு வந்து அமர்ந்தார்.

“பிரதர் சரீரத்துல ஏதாவது மாற்றம் தெரிஞ்சுதா? என்றார் மறக்காமல்.

ஆமாங்க…. என்னவோ ஒரு மாற்றம் தெரியற மாதிரி இருக்கு….

”நான் சொன்னனில்ல…. ராத்திரி முழுக்க ஜெபிச்சேன். உங்க சரீரம் குணம் ஆகணும்கிறதுக்காக… அதான்…. அதான்…. பலிச்சுடுச்சு….” உற்சாகத்தில் துள்ளினார் அவர்.

என்ன மாற்றம் தெரியுது உங்குளுக்குள்ள… கமான்… சீக்கிரம் சொல்லுங்க பிரதர் என்று பரபரத்தார் மனிதர்.

எனக்குள்ள இருந்த வீசிங் போன மாதிரி இருக்கு….. ஆனா….

”என்ன ஆனா? கமான் தயங்காம சொல்லுங்க….”

அதுக்கு பதிலா ஹெர்ட் அட்டாக் வந்தமாதிரி இருக்கு என்றேன்.

வாடிகனுக்குப் போனாலும் வயித்தெரிச்சல் தொலையாது….ங்குறது இதுதான் போலிருக்கிறது.